Wednesday, June 30, 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி உலக அரங்கில் தமிழ்தேசியத்தை அடுத்தநிலைக்கு முன்னெடுத்துச் செல்லும் கலைஞருக்கு வாழ்த்துக்கள்



























Friday, June 11, 2010

கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

31/5/2010
மேட்டுப்பாளையம்:சிறுமுகை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் 21ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமை வகித்தார்.

அதிகம் மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணாவ,மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுத்தொகை வழங்கி, கவிஞர் வைரமுத்து பேசியதாவது:தன்னைப் போல் துன்பம் அடையக்கூடாது என்று நினைப்பவர் தான் உயர்ந்த மனிதர். கொடையில், சோறு, அரிசி, நெல் கொடுப்பது என மூன்று வகை உள்ளது. சோறு அன்றைய பசியையும்; அரிசி நாளைய பசியையும் போக்கும். ஆனால் நெல் நிலத்தில் விளைந்து பன்மடங்கு பலன் தரும். அதேபோல மாணவர்களாகிய நீங்கள் விதை நெல்லைப் போல் இருக்க வேண்டும்.கல்வி தான் சமுதாயத்தை மேம்படுத்தும். மதமும், அரசியலும் சமுதாயத்தை மேம்படுத்தாது. கல்வி தான் ஒரு மாணவருக்கு அழகை கொடுக்கும். கல்வியின் மூலம் மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முயற்சி செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி பேசும்போது ""மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்,'' என்றார்.மேலும்

""தமிழகத்தில் உள்ள 53 ஆயிரம் பள்ளிகளில், 1.45 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் வியாபார நோக்குடன் செயல்படக் கூடாது என்பதற்காக, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. எவ்வித கல்விக் கட்டணம் வாங்காமல் இப்பள்ளி நிர்வாகம், 1,400 மாணவர்களுக்கு இலவச கல்வியை அளிக்கிறது. இது அல்லாமல் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி வருகிறது. மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
முன்னதாக ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வரவேற்றார். கோவை ஐ.ஜி., சிவனாண்டி வாழ்த்திப்பேசினார். அதிக மதிப்பெண் பெற்ற 4,500 மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.

Wednesday, June 2, 2010

ஒக்கலிகர் உனுசுவார் குலம்

நன்றி தினமலர்: மே 29,2010,01:00 IST

உத்தமபாளையம் அருகே ஆனைமலையன் பட்டியில் ஒக்கலிகர் உனுசுவார் குலத்தினருக்கு பாத்தியப்பட்ட மல்லையசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் ஐந்து நாட்களும் கணபதி பூஜை, அர்த்த ஜாம பூஜை, உச்சிகால பூஜை, சிலைகள் ஜலாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

ஜீவ சடங்குகள்,சுவாமி சிலைகளையும், கலசங்களையும் கருவறையில் எழுந்தருளச் செய் தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு மல்லைய சுவாமி மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமாள், மகாவிஷ்ணு, அக்கு மாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நீலகண்டன் நம்பூதிரி, ஈஸ்வரன்போத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்

நன்றி தினமலர்: மே 30,2010,10:18 IST

கோவை: ""விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்'; அதே நேரத்தில் "கிடைத்ததை விரும்பினாலும் வெற்றி பெற முடியும்'. நாம் விரும்பியது கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் வருத்தப்படக் கூடாது, என்று மயில்சாமி அண்ணாதுரை பேசினார். ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:


தாய்மொழிக்கல்வி தான் சிறந்தது; இந்த தாய் மொழிக்கல்வி தான் என்னை சந்திராயனுக்கு கொண்டு சென்றது. "விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்'; அதே நேரத்தில் "கிடைத்ததை விரும்பினாலும் வெற்றி பெற முடியும்' . நாம் விரும்பியது கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் வருத்தப்படக் கூடாது. இந்தியாவில் கடந்தாண்டு 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 27 சதவீதம் பேர் கூட உண்மையான பொறியாளராக வருவதில்லை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பொறியாளர் படிப்பில் வெறும் பாடத்திட்டத்தை மட்டும் படித்தால் போதாது; முதலாம் ஆண்டில் இருந்தே செய்முறை பயிற்சி மிக அவசியம். ஒவ்வொருவரிடமும் படிப்புடன் திறமை உட்பட அதிக தகுதிகள் எதிர்பார்க்கின்றனர். அந்த தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே சிறந்த சாதனையாளர்களாக வருகின்றனர். எந்த துறையில் சாதனை பெற்றாலும், மனித நேயத்தை மறந்து வாழக்கூடாது. சுயசிந்தனை ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். தாய்மொழியில் படிக்கும் போதுதான் சுய சிந்தனையால் எதையும் சாதிக்க முடியும். பொதுநலக் கொள்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து பேசியதாவது: சாதிக்க வேண்டுமென்றால் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது, சாதனையாளராக வரவேண்டும். அதற்கு லட்சியத்தை முன் வைக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மாற்றும் செய்து ஐந்து முக்கிய அம்சங்கள் அடங்கிய கல்வியை உருவாக்க வேண்டும். ஒன்று, கலாச்சாரம், பாரம்பரியம் <உள்ள பாடம் இருக்க வேண்டும். இரண்டு, அவற்றை மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மூன்று, இந்தியாவை பற்றி மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு, எதிர்காலத்தில் நம்மை எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். ஐந்து, தொலை நோக்குடன் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், இந்த ஐந்து அம்சங்களை மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தான் நாடு வல்லரசாக மாறும். இன்றை இளைஞர்கள் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து வருகின்றனர். வேலைக்கு சேர்ந்ததும், அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில், பெற்றோரை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கின்றனர். இவ்வாறு, கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.


விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி வரவேற்றார். ராம்ராஜ் காட்டன் கம்பெனி உரிமையாளர் நாகராஜ், ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை தலைவர் ராமசாமி, விஜயலட்சுமி அறக்கட்டளை கல்விக்குழு தலைவர் ரங்கசாமி மற்றும் பலர் பேசினர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணிக்கராஜ், ரீனா, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி காஞ்சனா, இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் எடுத்த நான்கு விவசாயிகள் ஆகியோரை விழாவில் கவுரப்படுத்தினர். 4 ஆயிரத்து 500 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டது.


கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கத் தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.