Friday, July 20, 2012

இன்று சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஜூன் 29,2012 
A+  A-
திண்டுக்கல்:ஒக்கலிகர் (காப்பு)படவனவார் குலம்,வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.ஒக்கலிகர் சங்க மாநில கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமை வகிக்கிறார். நான்காம் கால பூஜையுடன் விழா துவங்குகிறது. 8.45க்கு தீர்த்தம் அழைத்து வரப்படுகிறது. 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. திண்டுக்கல் டவுன், செம்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் விசுவநாதன், ஆனந்தன், முன்னாள் அமைச்சர் பெரியசாமி,எம்.பி., க்கள் ஞானதேசிகன்,சித்தன்,தம்பிதுரை, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவரும்,முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், அறங்காவலர்கள் இளங்கோவன்,சவடமுத்து,சவடப்பன், சங்க தலைவர் காளியாயி(எ) ராமசாமி,ஆசிரியர் சுந்தரபாண்டியன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
நன்றி; தினமலர்

ஒக்கலிகர் சங்க கூட்டம்

டிசம்பர் 27,2011,22:32 IST








தேனி : தேனி ஒக்கலிகர் நலச்சங்கத்தின் மகாசபை கூட்டம், தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. முன்னாள் செயலாளர் சுப்புராம் வரவேற்றார். செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வாசித்தார். கோவை விஜயலெட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகச்சாமி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, சங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஞ்சடிக மடத்தின் பீடாதிபதி சாந்தவீரசுவாமிகள்,தமிழ்நாடு ஒக்கலிகர் சங்க தலைவர் வெள்ளியங்கிரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூடலூர் நகராட்சி தலைவர் அருண்குமார், க.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் ஜானகி, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி, கே.கே.பட்டி பேரூராட்சி தலைவர் சாந்தி, அன்னஞ்சி ஊராட்சி தலைவர் பிரகாஷ் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நடராஜன், துணை தலைவர்கள் கர்ணன், சிவாஜி மோகன், கூடலூர் ஆனந்தனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், முருகன், துணை செயலாளர்கள் ராஜாராம், ராஜ்குமார், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.
நன்றி தினமலர்