Friday, May 3, 2013

ஒக்கலிகர் தின விழா




நன்றி:தினமனி;
காரமடையில் 30-ஆம் தேதி  ஒக்கலிகர் தின விழா
By  மேட்டுப்பாளையம்
First Published : 28 December 2012 08:11 AM IST
காரமடையில் வரும் 30-ஆம் தேதி ஒக்கலிகர் தின விழா நடைபெறுகிறது.
 
இது குறித்து தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் ஜோதிமணி கூறியது:
 
கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, தேனி, கம்பம் உள்ளிட்ட 9 மாவட்டப் பகுதிகளில் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டு பெரும்பான்மையாக வசித்து வரும் ஒக்கலிக இன மக்களை ஒன்றுசேர்க்கும் விதமாகவும், அவர்களின் மேம்பாடு குறித்து ஆலோசிக்கும் வகையிலும் இவ் விழா கொண்டாடப்பட உள்ளது.
 
காரமடை நகரம் மற்றும் வட்டார ஒக்கலிக மகாஜன சங்கம் சார்பில் ரவி ராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு, மாவட்ட சங்கத் தலைவர் சாம்ராஜ் தலைமை வகிக்கிறார். காரமடை சங்க பொருளாளர் எம்.கே.கே மோகன், மாவட்ட செயலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
 
இதில் மாநில ஒக்கலிக மகாஜன சங்கத் தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி, தொகுதி எம்எல்ஏ .கே. சின்னராஜ், மாவட்ட சங்க கெüரவத் தலைவர் டாக்டர் ராமசாமி, சங்க சட்ட ஆலோசகர் மா. சின்னராசு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், காரமடை ஒன்றியக் குழு தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் தலைவர் ஆறுமுகசாமி, தொழிலதிபர்கள் கிருஷ்ணசாமி, சண்முகசுந்தரம், எம்கேகே விஜயன், பாலாஜி ராஜேந்திரன், பிஎன் ராஜேந்திரன், எம்என்ஜி கோபால், கல்யாணசுந்தரம் உள்பட சங்கத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
இவ்விழாவில், ஒக்கலிக மகாஜன சங்க கெüரவத் தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளையின் நிறுவுனருமான .ஆறுமுகசாமி கெüரவிக்கப்பட உள்ளார். மேலும் அவரது பிறந்த நாள் நினைவாக, ஏழை எளிய மாணவ,மாணவியருக்கு இலவச கல்வி உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்றார் அவர்.