Tuesday, November 23, 2010

vokkaliga's cine artiests




www.sahyadrifoundation.com/Cinema.htm






















Saturday, November 13, 2010

மகாஜன சங்கத்தின் 53-வது மகாசபைக் கூட்டம்

dinamani:
மதுரை ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

First Published : 21 Sep 2009 03:20:40 AM IST


பழனி, செப். 20: பழனியில் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்கத்தின் 53-வது மகாசபைக் கூட்டம், மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, இலவச தங்கும் விடுதி திறப்பு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஸ்ரீவிஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஆறுமுகசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திருமலைராஜ், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் காந்திராஜன், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பார்த்திபன், கிருஷ்ணகுமார், அச்சுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலரும், வேடசந்தூர் ஊராட்சித் தலைவருமான பிரியம் நடராஜன் வரவேற்றார். சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அப்பாஜி ராஜ்குமார், ராமசாமி, சக்தி உள்ளிட்ட பலர் வழங்கினர். சங்க பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். இதே தேதியில் மற்றொரு பிரிவினர் இங்கு போட்டி நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நான் விவசாயியாக வாழ்க்கையை துவங்கி, பிரதமராக முன்னேறினேன்:தேவகவுடா


TN69ABI.com செப்டம்பர் 27,2010
"பந்திப்பூரில் இரவு போக்குவரத்து தடை நீக்க சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவேன்'

ஊட்டி:"தேசிய நெடுஞ்சாலை 67ல், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க, சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாக' முன்னாள் பிரதமர் தேவகவுடா ஊட்டியில் உறுதியளித்தார்.மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று ஊட்டி வந்தார். அவருக்கு, நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நடந்த ஒக்கலிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தேவகவுடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:நீலகிரியில் உள்ள கன்னட மக்கள், கர்நாடக மாநிலம் ஹாசன், மாண்டியா பகுதிகளிலிருந்து வந்து இங்கு வசிப்பவர்கள். இவர்கள் யாரும் பணம் படைத்தவர்கள் இல்லை. அடிப்படையில் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளனர்.நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் மூன்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக மேட்டுப்பாளையத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67ல் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகவும், இந்த தடையை நீக்க வேண்டும் என கோரியுள்ளனர். இது குறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவேன்.கர்நாடக மாநில பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் நீலகிரியில் வசிக்கும் கன்னட மக்களுக்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் கல்வி கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும்.

இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. மேலும், ஒரு மாநில மக்களுக்காக பிற மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது சிக்கல். இரு மாநில அரசுகளும் உடன்பட்டால் தான் முடியும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும்.நீலகிரியில் உள்ள கன்னட மக்கள் பயன்பாட்டுக்காக நிலம் வழங்க தமிழக அரசிடம் நீங்கள் முறையிடுங்கள். இது குறித்து அவசியம் ஏற்பட்டால் முதல்வர் கருணாநிதியிடம் நான் பேசுவேன். நான் விவசாயியாக வாழ்க்கையை துவங்கி, பிரதமராக முன்னேறினேன். நான் அரசியலுக்கு வந்தது விபத்து. அதே போல எனது மகன் குமாரசாமியும் திரைப்படங்களை தயாரித்து வந்தார். எதிர்பாராத விதமாக அவரும் அரசியலுக்கு வந்து விட்டார்.இவ்வாறு தேவகவுடா பேசினார்.

Thursday, November 11, 2010

ஒக்கலிகர் நாட்டாண்மை நூற்றாண்டு விழா

தினமலர்:பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2010,00:49 IST

கம்பம்: கம்பம் காமுகுல ஒக்கலிகர் (காப்பு) சங்கம் மற்றும் ஒக்கலிகர் இளைஞர் பேரவை சார்பில் ரத்ததான முகாம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. கம்பம் காமுகுல ஒக்கலிகர் நாட்டாண்மை ராஜூ கவுடர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாமிற்கு இளைஞர் பேரவை தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். ஒக்கலிகர் சங்க தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இளைஞர் பேரவை பொருளாளர் ஆதிராஜ்குமார் வரவேற்றார். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் சுப்புராஜ், டாக்டர்கள் மணிமோகன், சையதுசுல்தான் இப்ராகீம், சூர்யகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. கோலப்போட்டிகளில் முதல் பரிசை மேகலா, இரண்டாம் பரிசை லதா ஆகியோர் பெற்றனர். முன்னாள் எம்.பி. கோபால், முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராயர், ஒக்கலிகர் சங்க செயலாளர் தாத்துராஜ், இளைஞர் பேரவை துணை தலைவர் எஸ்.தாத்துராஜ் உட்பட கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

போஸ்டருக்கு எதிர்ப்பு

தினமலர் : அக்டோபர் 23,2010
கூடலூர் : சமுதாய சங்கத்தின் பொறுப்பாளர்களை விமர்சித்து போஸ்டர் அடித்து ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கானோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கூடலூர் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கதிர் அடிக்கும் களத்தை பயன்படுத்த இதே சங்கத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சங்கம் சார்பில் ஏலம் விடப்பட்டிருந்தது.

ஏலம் எடுத்த தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னரும் சங்கத்திற்கு அவர் செலுத்தவில்லை. ஏலம் எடுத்த தொகையை செலுத்துமாறு கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சங்க தலைவர் அச்சுதன், செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை கலங்கப்படுத்தும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூடலூரில் உள்ள ஒக்கலிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடலூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம் புகார் கொடுத்தனர்.

கொடியேற்று விழா

நன்றி:24 dunia

கம்பம், நவ. 2:கம்பத்தில் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் சார்பில் கொடியேற்று விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு சக்தி ஸ்டோர் வாசகர் தலைமை வகித்தார். அக்ரிமுருகேசன், ராஜேந்திரன், திருப்ணிக்குழு உறுப்பினர் வெங்கடேசன், சித்திரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காந்திஜி பூங்கா, கூழத்தேவர் முக்கு, நாட்டுக்கல், கிருஷ்ணாபுரம், ஜாலிமரம், நந்தகோபாலன் கோயில் பகுதி, கெஞ்சையன்குளம், சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சங்கத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி மாவடடங்களுக்கான துணைத் தலைவர் .கே.எம். செந்தில்குமார் சமுதாயக் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

Sunday, November 7, 2010

மின் தமிழுக்கு நன்றி


விவசாயத்திற்காக விரைவாக இரண்டு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கிய கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சார்பாகவும் ஒக்கலிக் கவுண்டர்கள் சங்கம் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.