Sunday, January 31, 2010

ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

நன்றி தினமணி மதுரை
ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

First Published : 21 Sep 2009 03:20:40 AM IST

 பழனி, செப். 20: பழனியில் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்கத்தின் 53-வது மகாசபைக் கூட்டம், மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, இலவச தங்கும் விடுதி திறப்பு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

 ஸ்ரீவிஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஆறுமுகசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திருமலைராஜ், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் காந்திராஜன், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பார்த்திபன், கிருஷ்ணகுமார், அச்சுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 செயலரும், வேடசந்தூர் ஊராட்சித் தலைவருமான பிரியம் நடராஜன் வரவேற்றார்.

 சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அப்பாஜி ராஜ்குமார், ராமசாமி, சக்தி உள்ளிட்ட பலர் வழங்கினர்.

 சங்க பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

 இதே தேதியில் மற்றொரு பிரிவினர் இங்கு போட்டி நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
.நன்றி தினமணி

Wednesday, January 27, 2010

இருவருமே கவுண்டர்கள்தான்

நன்றி;Oneindia Mobile       
         தென் மாவட்டங்களில் காலூன்ற பல்வேறு பிரயத்தனங்களை ராமதாஸ் செய்து வருகிறார். ஆனால் திருச்சியைத் தாண்டி உள்ளமாவட்டங்களில் பாமகவுக்கென்று பெரிய சக்தி ஏதும் இதுவரைஉருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வன்னியர்கள்(வன்னியக் கவுண்டர்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு) எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருப்பதே இதற்குக் காரணம்.

இந் நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள கன்னட மொழி பேசுவோரை பாமக பக்கம் இழுக்க ராமதாஸ் தீவிர முயற்சிகள்மேற்கொண்டுள்ளார். கன்னட மொழி பேசும் கெளடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, தேனி மாவட்டங்களில் கணிசமாகஉள்ளனர்.

இவர்கள் தங்களை கவுண்டர் என்று தான் கூறிக் கொள்கிறார்கள். இவர்களை சந்தித்து வரும் பாமக பிரமுகர்கள் நீங்களும்வன்னியக் கவுண்டர்கள் தான், நம் இருவருக்கும் மொழி தான் வேறு, ஆனால் இருவருமே கவுண்டர்கள் தான். எனவேபாமகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களியுங்கள்.

உங்களது சமூகத்தையும் மேலே தூக்கி விடுகிறோம். பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். பாமகவினரின்இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, கம்பம், உத்தமபாளையம், சுருளி உள்ளிட்ட இடங்களில் பாமக கொடிபட்டொளி வீசிப் பறந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதை கருத்தில் வைத்துத் தான் தென் மாவட்டங்களிலும்போட்டியிடுவோம் என ராமதாஸ் கூறத் தொடங்கியுள்ளார்.


Oneindia Mobile

சுதந்திர போராட்ட தியாகிகள்

Oneindia Mobile
சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்
வியாழக்கிழமை, செப்டம்பர் 10, 2009, 17:41 [IST]

சென்னை: சென்னையில் மத்திய அரசுக்கு நிகராக தமிழக அரசும் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரி சுதந்திர போராட்ட தியாகிகள் வரும் 18ம் தேதி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலவாழ்வு இயக்கம் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 18ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில தலைவர் என்.துரை தலைமை வகிக்கிறார்.

தியாகிகள் நல சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வலம்புரித்தேவர், சென்னை மாவட்ட தலைவர் ஆண்டியப்பன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன்னையா பிள்ளை, நெல்லை மாவட்ட தலைவர் சாவடி சொக்கலிங்கம், சென்னை மாவட்ட பொது செயலாளர் குருமூர்த்தி, தேனீ மாவட்டம் கதிரய கவுடர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஈமசடங்கு தொகையை உயர்த்த வேண்டும்...

அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தை போல் தமிழக அரசும் வழங்கிட கோரியும், மத்திய அரசு பென்சன் வாங்கும் தியாகிகள் இறந்தால் அதே ஓய்வூதியத்தை அவர்களது மனைவிமார்களுக்கு வழங்குவது போல் தமிழக அரசும் வழங்கிடவும், ஈமசடங்கு தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

தியாகிகளின் வயது, முதுமை கருதி அவசர கால மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ம்ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் முழு மருத்துவ செலவையும், மத்திய-மாநில அரசுகள் ஏற்கவும் தியாகிகள் அவரது வாரிசுகளின் நலன் கருதி காமராசர் மத்திய அரசு இசைவுடன் இட்ட மாநில அரசாணை 1430ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

முன்னாள் படைவீரர்கள் குடும்பத்திற்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வருமான வரம்பிலிருந்து விலக்களி்த்திருப்பது போல் தியாகிகளுக்கு விலக்கு அளிக்க கோரியும், தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தியாகிகளின் வாரிசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடஓதுக்கீடு வழங்கிடவும், தியாகிகள் குடும்ப நல வாரியம் அமைக்கவும், வீட்டு மனை பட்டா, இரண்டு ஏக்கல் நிலம், அரசு மருத்துவமனைகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை அரசு விழாவாகவும், விடுமுறை நாளாகவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடக்கவிருக்கிறது.

இதை சென்னை தியாகிகள் வாரிசுகள் சங்க துணை தலைவர் சந்திரன் துவங்கி வைத்து பேசுகிறார்.

தியாகிகள் வாரிசுகள் சங்க மாநில தலைவர் தவசிமுத்து, வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில பொது செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு காமராசர் பாசறை தலைவர் அய்யப்பன், ஆகியோர் கோரிக்கை விளக்க உறையாற்றுகின்றனர். கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தேசிய மனித உரிமை, நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க தேசிய பொது செயலாளர் சுந்தரேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில செயலாளர் கதிரேசன் நன்றி தெரிவிக்கிறார்.
Click Here for Beautiful Skin!
Click Here for Beautiful Skin! »Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope

© Greynium Information Technologies Pvt. Ltd.

தமிழகத்தின் பக்கம்தான் நியாயம்

ஓகனேக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் நஞ்சே கெளடா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், நஞ்சே கெளடா கூறுகையில், உண்மை என்னவென்றால் போராட்டம் நடத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்துத் தெரியவில்லை.

இரண்டு மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயோ ஒரு ஆறு ஓடினால், அதன் நடுவில் ஒரு கோட்டைப் போட்டு எல்லை பிரிப்பது என்பது சர்வதேச அளவில் உள்ள நடைமுறை.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இன்னொரு நடைமுறை, ஆற்று நீரைப் பயன்படுத்தும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது குடிநீருக்குத்தான். அடுத்து நீர்ப்பாசனத்திற்கும், பிறகு மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்துவார்கள்.

ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க குடிநீருக்கான திட்டம். மேலும், அந்தத் திட்டத்தை தமிழகத்திற்குட்பட்ட பகுதியில்தான் செயல்படுத்தப் போகிறார்கள். எனவே கர்நாடகத்தால் அதை எதிர்க்க முடியாது. எதிர்ப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஓகனேக்கல் முன்பு கோவை மாவட்டத்தில் இருந்தது. 1956ம் ஆண்டு கொள்ளேகால் கர்நாடகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கொள்ளேகாலுக்கும், ஓகனேக்கலுக்கும் இடையே ஓடும் காவிரி ஆறுதான் இரு மாநிலங்களுக்கும் எல்லைக் கோடாக நிர்ணயிக்கப்பட்டது.

1998ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி குடிநீருக்காகத்தானே தவிர, மின்சாரத்திற்கான திட்டத்திற்கு அல்ல. எனவே தமிழகம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அப்படி அவர்கள் மின்சாரம் தொடர்பான அணை கட்ட நினைத்தால் அதுகுறித்து கர்நாடகத்திடம் அறிக்கை தர வேண்டும். அப்படி இதுவரை எந்த அறிக்கையும், கடிதமும் கர்நாடகத்திற்கு வரவில்லை. எனவே அது குறித்த திட்டம் அவர்களிடம் இல்லை என்றே அர்த்தம்.

ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதுகுறித்து சுப்ரீம் கோர்ட் செல்லலாம்.

உணர்ச்சிப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோஷம் போடுகிறார்கள். இப்போது உள்ள பிரச்சினை தண்ணீர்ப் பங்கீடு தொடர்பானதே அல்ல. இது முழுக்க முழுக்க தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம். இதில் கர்நாடகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்ைல என்பதை உண்மை.

உண்மையில், ஓகனேக்கல் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தீவு குறித்துத்தான் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. ஆனால் அதுகுறித்து யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை.

இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைத்தது தேவையற்றது. பத்து வருடங்களாக கிடப்பில் போட்டிருந்தவர்கள், ஒரு மாதம் காத்திருந்து என்ன செய்து விடப் போகிறார்கள். உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கர்நாடக ஆளுநரை அழைத்து, இந்தத் திட்டம் குறித்த உண்மையை கர்நாடக மக்களுக்கு விளக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அப்போதுதான் கர்நாடக மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.

தவறாக வழிநடத்துபவர்களால் தவறான வழிக்கு யாரும் போய் விடக் கூடாது. வன்முறையில் இறங்காதீர்கள். அனைவரும் சகோதரர்கள். சகோதரர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நஞ்சே கெளடா.

Sunday, January 17, 2010

இலக்கியம்


  திரு.சு வேணுகோபால் . முக்கியமான இளம் தமிழ் எழுத்தாளர். இவரின் நுண்வெளி கிரணங்கள்  எனும் நாவல், மதுரை ஒக்கலிக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு.அருமையான நாவல். பூமிக்குள் ஓடுகிறது நதி , கூந்தப்பனை முதலிய சிறுகதை தொகுப்புகள் தமிழினி வெளியீடக வந்துள்ளன. மூன்றுதலைமுறை வரலாற்றை சொல்லும் பெரும் நாவல் ஒன்றின் பணியில் இருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் .

Saturday, January 16, 2010

சிறு தானியங்கள்

     சிறு தானியங்கள் தான் இனி எதிர்காலம்
வெறும் பேச்சல்ல... வியக்க வைக்கும் சாதனை!
"எங்களை கம்பும் கேழ்வரகும் சாப்பிடச் சொல்கிறீர்களே... நாங்கள் என்ன இழி பிறவிகளா...?
எங்களுக்குத் தேவை அரிசி... தமிழக அரசே! ரேஷனில் ஒழுங்காக அரிசியை விநியோகம் செய்!"
-சமீபத்தில் புதுக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஒலித்த கோஷம் இது.
இவர்களைப் பொறுத்தவரை கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களைச் சாப்பிடுபவர்கள் இழிபிறவிகள்...!
ஆனால், பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?
"ஒரு காலத்தில், 'ஏழைகளின் உணவு'என்று சொல்லப் பட்ட கம்பு,
கேழ்வரகு, சோளம், தினை எல்லாம் இன்று, வசதியானவர்களின் உணவாக மாறியுள்ளது. ஆந்திர மாநில முதல்வர், வேளாண் துறை அமைச்சர், செயலர் போன்றவர்கள் எங்களுடைய சொசைட்டியால் நடத்தப்படும் சிறுதானிய கடைகளில், சிறுதானியங்களை வாங்கிச் சென்று, சமைத்து உண்கிறார்கள்" என்று பெருமையோடு சொல்கிறார் 'டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி'யின் இயக்குனர் சதீஷ்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆந்திர மாநில கிராமங்களில் சிறுதானியங்களை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது இந்த 'டெக்கான் டெவலப் மெண்ட் சொசைட்டி'. இதனுடன் இணைந்து, 'சிறு தானியங்கள்தான் இனி எதிர்காலம்'என்ற தலைப்பில் ஐதராபாத் நகரில் இரண்டு நாள் கலந்தாய்வு கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது தேசிய ஊரக வளர்ச்சி மையம். நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத் தில்தான், சிறுதானியங்களின் பெருமைக்கு கட்டியம் கூறினார் சதீஷ்.
உடல் பிரச்னைக்கு மட்டுமல்ல... உலக பிரச்னைக்கும்...
''சிறுதானியங்களில்தான் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் நாம் ஒதுக்கத் தொடங்கியதும் நம் மூளையும், உடலும் பலமிழந்து போய்விட்டது. அதனால் தான் இன்று வகை, வகையான நோய்கள் மனிதகுலத்தை வாட்டுகின்றன. 'காலம் திரும்பவரும்'என்பதுபோல 'சிறு தானியங்கள்தான் சத்துக் குறைவான வர்களுக்கு கண் கண்ட மருந்து'என மருத்துவர்களே இப்போது கூறிவருகிறார்கள்.
உடல் பிரச்னைகளுக்கு மட்டுமல்ல... இன்றைக்கு உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கும் சிறுதானியங்கள்தான் ஒட்டுமொத்தத் தீர்வு. சிறுதானியங்களைப் பயிரிடும் விவசாயி, சொந்தக் காலில் நிற்கிறார். சிறுதானியம், உணவுப் பாதுகாப்பை அளிக்கிறது. கால்நடைகளுக்குத் தீவனத்தையும் கொடுக்கிறது. மருத்துவச் செலவுக்கு முடிவு கட்டுகிறது, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எளியவர்களுக்கும் கிடைக்க செய்கிறது.
கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றை பயிர் செய்வதற்காக நிலத்தை குடைந்து நீர் எடுக்கத் தேவையில்லை. மானாவாரியிலேயே மகசூலை அள்ளிக்கொடுத்துவிடும் அட்சய பாத்திரங்கள்தான் சிறுதானியங்கள். கடன் வாங்கி பூச்சி மருந்து, உரம் இதெல்லாம் போடத் தேவையில்லை. உங்கள் வீட்டிலும் பண்ணையிலும் கிடைக்கும் இயற்கை உரங்களே போதும்.ஆகமொத்தம் விவசாயிக்கு நஷ்டமில்லை; வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள்; நீராதாரம், நிலவளம் எதுவுமே பாதிப்பதில்லை; உயிர்ச்சூழல் கெடுவதில்லை; சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை; 'விளைச்சல் இல்லையே'என்று வேலை தேடி பட்டணத்துக்குப் போக வேண்டியதில்லை. மொத்தத்தில் விவசாயிகள் இந்த மண்ணில் மகிழ்ச்சியோடு வாழ ஒரே வழி... சிறுதானியங்கள் மட்டும்தான்" என்று அழுத்தமாகச் சொன்னார் சதீஷ்.
பாதிக்க வைத்த பருத்தியும் வெங்காயமும்!
கர்நாடகாவில் இருந்து இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு வந்திருந்த 'இந்திய&இயற்கை விவசாயக் கூட்டமைப்பு'தலைவர் பரம கவுடரு, தன்னுடைய அனுபவத்தையே சான்றாக்கிப் பேசினார்.
"நான் ஒரு மானாவாரி விவசாயி. சிறுதானியங்களை பல ஆண்டு காலமாக பயிரிட்டு வருகிறேன். ஒரு காலத்தில் சிறுதானியத்தை எட்டி உதைத்தவன்தான் நான். 1973&ம் ஆண்டு விவசாயம் செய்யத் தொடங் கினேன். அதற்கு முன்பு வரை என் தந்தை பலவிதமான தானியங்களைப் பயிரிட்டுவந்தார். நானோ, 'பருத்தியும், வெங்காயமும் போதும்'என்று பணப் பயிர்களுக்குத் தாவினேன். ரசாயனங்களைக் கொட்டினேன். விளைவு... கடன் பட்டேன். மண் வளம் இழந்தது, 1988&ம் ஆண்டு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பினேன். கையோடு சிறுதானியத்தையும் எடுத்துக் கொண்டேன். இப்போது என் குடும்பத்துக்குச் சத்தான உணவு கிடைக்கிறது. ஆடு, மாடுகளுக்குத் தீவனம் கிடைக்கிறது. சந்தோஷமாக வாழ்க்கை போகிறது" என்று சொன்னார்.
அரசே விழித்துக்கொள்!
மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் இருந்து வந்திருந்த விவசாய சங்க பிரமுகர் விஜய் ஜெய்வந்தியா, "அரசுகளின் தவறான விவசாயக் கொள்கை காரணமாக அதிக நீரினை பயன்படுத்தி விளையக்கூடிய நெல், கோதுமை இவற்றை மட்டுமே விவசாயிகள் பயிரிட்டனர். இதனால் இன்றைக்கு எல்லா வளமும் இழந்து நிற்கிறோம். 'பணம்... பணம்...'என்று ஆசைக்காட்டப்பட்டதால் விஷத்தை யும், போலி விதைகளையும் இதுநாள் வரை நாடினோம். ஆனால், சிறுதானியங்களைப் பயிரிட்டாலும் வசதியாக வாழமுடியும் என்பது தான் உண்மை. அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு, சிறுதானியங்களை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார் உணர்ச்சி பொங்க.
கூட்டம் முடிந்த பிறகு, ''சிறுதானியங்களை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கமுடியாது என்றுதானே ஒரு காலத்தில் அதை கை கழுவினார்கள் விவசாயிகள். இப்போது, அதை வைத்து சாதிக்கமுடியும் என்கிறீர்களே... இதை எப்படி நம்ப முடியும்?" என்று 'டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி'யின் இயக்குனர் சதீஷிடம் கேட்டோம்.
மிகவும் பொறுமையாக ஆரம்பித்தவர், "அது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களான யூரியா, பூச்சிக்கொல்லி போன்றவற்றை விற்பனை செய்வதற்கு வசதியாக முதலில் சிறுதானியங்களை வழக்கொழிந்து போகச் செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. மீண்டும் சிறுதானியங்களை உயிர்ப்பிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தெம்பு கூட்டமுடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, ஆதாரங்களை அடுக்கினார்.
சோளம் எங்கள் வேதம்!
''ஐதராபாத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஜகிராபாத் மண்டல். இப்பகுதியில் மழையை மட்டுமே நம்பியுள்ள 77 கிராமங்களில் 20 ஆண்டு காலமாக எங்கள் அமைப்பு பணியாற்றி வருகிறது. ஏழ்மை நிறைந்த இந்தக் கிராமங்களில் வறுமையை விரட்ட முதலில் நாங்கள் கையில் எடுத்தது சோளம்! இந்தக் கிராமங்களில் சோளம்தான் முக்கிய பயிர். முதலில் அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சோளம் பயிரிடச் சொன்னோம். இதற்காக மூன்று ஆண்டுகள் அவர்களுக்குக் கடன் கொடுத்தோம். நிலத்தை தயார் செய்ய முதல் ஆண்டு ரூ.2,700 இரண்டாம் ஆண்டு ரூ. 1,000, மூன்றாம் ஆண்டு ரூ.500 என மொத்தம் ரூ.4,200 கொடுத்தோம்.
இதைப் பணமாகத் திருப்பித் தராமல், தானியமாக ஐந்து ஆண்டுகளில் கொடுக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தோம். முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 150 கிலோ, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில் தலா 200 கிலோ கொடுக்கவேண்டும். ஒரு கிலோ ரூ.4.50 காசுக்கு எடுத்துக்கொள்கிறோம். இதைப் பொதுவிநியோக முறையின் கீழ் அந்தந்த கிராமங்களிலேயே கிலோ ரூ 3.50 காசுக்கு மக்களிடமே விற்பனை செய்கிறோம். கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் மானிய விலையில் கொடுக்கிறோம். அதிகப் படியான சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம், இதெல்லாம் எங்களுக்கு சாத்தியமாகிறது.
நடமாடும் சிறுதானியக் கடை!
இதுமட்டுமல்லாமல் நடமாடும் சிறுதானியக் கடைகளை விவசாயப் பெண்கள் நடத்தி வருகிறார்கள். சத்தான தானியங்களுக்கான உணவு விடுதியும் நடத்தப்படுகிறது. சிறுதானியங் களின் தேவை அதிகரிப்பதால் பயிரிடும் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
கிராமத்தில் உள்ளவர்கள் உணவுக்காக மட்டும் 60% பணத்தை செலவிட வேண்டிய நிலை இருக்கிறது. இந்தச் செலவை சிறுதானியங்கள் போக்கிவிடுகிறது. சிறுதானியம் மற்றும் பயறு வகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை ஏக்கருக்கு வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. நகரத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் ஆரோக்கி யமாக வாழ்கிறார்கள். அவர்களின் மற்றச் செலவு களுக்கு போதுமான பணமும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட அவர்கள் இழந்துவிட்ட மகிழ்ச்சி திரும்பவும் இப்போது அவர்களிடம் நிலைத்து நிற்கிறது" என்றார் புன்னகை பொங்க.
அகில இந்திய சிறுதானிய நெட்வொர்க்!
கூட்டத்தின் இறுதியில், 'சிறுதானியங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டும். இதன் மகத்துவம் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்'என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய 'ஐதராபாத் பேரறிக்கை'வெளியிடப் பட்டது. இந்திய அளவில் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஒன்று சேர்க்கும் விதமாக, 'இந்திய சிறுதானிய நெட்வொர்க்'என்கிற புதிய அமைப்பும் தொடங்கப்பட்டது.
தொடர்புக்கு:
Deccan Development SocietyPastapur village, Zaheerabad- Mandal - 502 220Medak Dist,Andhra Pradesh,Ph : 08451 - 282271, 282785web:www.ddsindia.com.

9 கோடி ரூபாய் உதவிகள்



January 15, 2010

முயற்சித்தால் வெற்றி தேடி வரும்



மேட்டுப்பாளையம்:கோவை ஸ்ரீவிஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திறன் ஊக்கப்பரிசு வழங்கும் விழா, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பிளஸ் 2வில் 1,000, 10ம் வகுப்பில், 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி தலைமை வகித்து பேசியதாவது: தனியார் பள்ளிகளில் கட்டாய கல்விக் கட்டணம் வசூல் செய்யும் இந்நாளில்,1,500 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பது, மற்ற பள்ளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.


இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் நல்லதாக இருக்கும். முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நம்மை தேடி வரும். இப்பரிசுத் தொகையை பெறும் மாணவர்கள், இந்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நல்லவர்களாக விளங்க வேண்டும். தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் பணம் வசூல் செய்கின்ற இந்நாளில், விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளியை இரண்டு கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைத்து, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை கொடுக்கிறது என்றால், நாம் பாராட்ட வேண்டும். இப்பள்ளி மேலும் வளர்ந்து பல்கலைக் கழகமாக மாறவேண்டும். இவ்வாறு பெருமாள்சாமி பேசினார்.


தமிழக அரசு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் மணி பேசுகையில், "உயர் கல்வி படிக்க முடியாத ஏழை, எளிய மாணவர்கள் இப்பள்ளியின் மூலம் படிக்க வாய்ப்பு உள்ளது. ஏழ்மை காரணமாக கல்வி வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக, இந்த அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி மிகவும் போற்றத் தக்கது' என்றார். பிளஸ் 2, 10ம் வகுப்பில் முதல் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கினார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி அருளாசி வழங்கினார். முன்னதாக, விஜயலட்சுமி பொதுநல அறிக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி வரவேற்றார்.


நன்றி - தினமலர்

.....................................................................................................





ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்

First Published : 05 Jan 2010 07:52:49 AM IST

Last Updated :

மேட்டுப்பாளையம் ஜன,4: பள்ளிகளின் நோக்கம், தரமான கல்வியை வழங்குவது மட்டுமின்றி, அது ஏழை மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத் கூறினார்.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை விஜயலஷ்மி மெட்ரிக் மேநிலைப் பள்ளியின் முதலாமாண்டு விழா கோவை கேஜி நிறுவனங்களின் தலைவர் கேஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஸ்ரீ விஜயலஷ்மி பொதுநல அறக்கட்டளை நிறுவுனர் ஓ. ஆறுமுகசாமி முன்னிலை

வகித்தார். பள்ளி முதல்வர் பால்துரை வரவேற்றார். திருமதி சத்தியபாமா

குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து ஆட்சியர் உமாநாத் பேசியது:

நன்றாக இயங்கிவரும் ஆலைகள் மூடப்படும்போது, அதைச் சார்ந்து இயங்கிவரும் பள்ளியோ அல்லது மருத்துவமனையோ மூடப்படுவதும் இயற்கை. ஆனால், சிறுமுகை விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டபோது, அதன் சார்பில் இயங்கிவந்த பள்ளியை மூடவிடாமல் விஜயலஷ்மி பொதுநல அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி, அப்பள்ளியிலுள்ள அனைத்து மாணவ,மாணவியருக்கும் இலவசக் கல்வியை வழங்கி வருவது, மிகவும் பாராட்டுக்குரியது.

கோவை மாவட்டம் அதிகளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை

கொண்டிருந்தாலும், அக்கல்லூரி கட்டணங்களை கூட கட்ட முடியாமல் கல்வியையே கைவிடும் நிலையில் நன்கு படிக்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் உள்ளனர். ஆனால் விஜயலஷ்மி அறக்கட்டளையினர் அம்மாதிரி ஏழை மாணவர்களை தேர்வு செய்து இலவச கல்வியை வழங்கி வருவது, ஈடு இணையற்ற செயலாகும்.

கடந்த வருடம் மட்டும் ரூ9}கோடி மதிப்பில் 5771}மாணவர்களுக்கு மதிப்பெண்

அடிப்படையில் கல்வி உதவி வழங்கியிருப்பது பெரிய சாதனையாகும். இப்பணி மேலும் தொட ர வேண்டுமென்றார்.

விழாவில், திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சிவனாண்டி பேசியது:

உலகில் இன்று பணம் படைத்து வாழ்ந்து வரும் பெரும்பாலான செல்வந்தர்களுக்கு,

பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனம் வருவதில்லை. ஆனால் சிறுமுகை போன்ற

கிராமப் பகுதிகளில், ஒருபள்ளியை நிறுவி அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்கி வரும் அறக்கட்டளை நிறுவுனர் ஓ. ஆறுமுகசாமி, செல்வத்தை மட்டுமின்றி அதை ஏழைகளுக்கு கொடுத்துதவும் மனதையும் கொண்டவராக உள்ளார். சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு அடிப்படையாக உள்ள வறுமையைப் போக்க கல்வி மிகவும் அவசியமாகிறது. இந்தக் கல்வியை இலவசமாக வழங்குவதன் மூலம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதில் இந்த அறக்கட்டளை பெரும் பங்கு

வகிக்கிறது. இதைபோல், பிற மாவட்டங்களிலுள்ள செல்வந்தர்களும் பள்ளிகளை நிறுவி இலவசக் கல்வியை வழங்க முன்வந்தால், சமுதாயத்தில் குற்றங்கள் குறைந்து

காவல்துறையின் பணியும் பாதியாக குறையும் என்றார்.

விழாவில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரி தலைமை நிர்வாகி டாக்டர் நடராஜன், முன்னாள் டிஎஸ்பி வெள்ளிங்கிரி, கவிஞர் டாக்டர் பர்வீன் சுல்தானா, இந்தியன் வங்கி பொதுமேலாளர் அறிவானந்தம் ஆகியோர் பேசினர். வட்டாட்சியர் சுகுமாரன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் உதயகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.கே. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ சின்னராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிச் செயலர் பி.என்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


நன்றி - தினமணி


.....................................................................................................



அடித்தட்டு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் கலெக்டர் உமாநாத் பேச்சு


மேட்டுப்பாளையம், ஜன. 4-

சிறுமுகையில் விஜயலட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளி யின் முதலாம் அண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாக பள்ளி கட்டிட திறப்பு விழா, சிலை திறப்பு விழா நடைபெற்றது.

கலெக்டர் உமாநாத் பள்ளி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி பட்டன் அழுத்தி திருவள்ளுவர் சிலையையும், பள்ளிக் கல்லித்துறை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி பட்டன் அழுத்தி விவேகா னந்தர் சிலையையும் திறந்து வைத்தார்கள். சத்தியபாமா பாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி வைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கே.ஜி.டெனிம் நிர்வாக இயக்குனர் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தார்கள். பள்ளி முதல்வர் பால்துரை வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கலெக்டர் டாக்டர் உமாநாத் பேசியதா வது:-

இந்த பள்ளி ஏற்கனவே ஒரு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த நிலையில், இங்குள்ள தொழிலாளர்கள், குழந்தைகளும் கல்வி கற்று வந்துள்ளனர். ஒரு நிறுவனம் நலிவடையும்போது, அதனைச் சார்ந்த ஊரும், பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பள்ளியை ஏற்று நடத்த முன்வந்து அனைவருக்கும் தரமான கல்வியை இலவசமாக கற்றுத்தர வேண்டும் என்ற அவர்களது எண்ணத்திற்கு எனது பாராட்டுக்கள். பள்ளிக்கல்வி தரமான தாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தரமான கல்வியை அனை வரும் வழங்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள அடித் தட்டு மக்களையும் கல்வி சென்றடைய வேண்டும்.

அது இல்லை என்றால் தரமான கல்வி என்பது வீண். உயர் கல்வியை படிக்க அனைவருக்கும் வாய்ப்பு இல்லை. அனை வருக்கும் கல்வி சமச்சீராகக் கிடைப்பதும் இல்லை. அறக்கட்டளை சார்பாக இதுவரை 5771 பேருக்கு ரூ. 9 கோடி வரை கல்வி ஊக்கத்தொகையாக வழங் கப்பட்டுள்ளது என்பதை அறியும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

அரசும் சரி, மாவட்ட நிர்வாகமும் சரி அடித்தட்டு மக்களைக் கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளிக்கொணர பல நல்ல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது.

இவ்வாறு கலெக்டர் உமாநாத் பேசினார்.

விழாவில் சென்னை தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஐ.எஸ்.பர்வின் சுல்தானா, பண்ணாரியம்மன் தொழில் நுட்ப கல்லூரி முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் ஏ.எம்.நடராஜன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வெள்ளிங்கிரி, கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, கோவை இந்தியன் வங்கி பொது மேலாளர் மற்றும் வட்டாரத் தலைவர் அறிவானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சுகுமாரன், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜ்குமார், சிறுமுகை பேரூராட்சி தலைவர் உதயகுமார், ஜடை யம்பாளையம் ஊராட்டி துணைத் தலைவர் பழனி சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராஜ், புலவர் நஞ்சப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். குழந்தைகள் பள்ளி செயலாளர் ராஜேந் திரன் நன்றி கூறினார்.

முடிவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

நன்றி - மாலைமலர்