Monday, October 11, 2010

ஒக்கலிகர் சங்க பரிசளிப்பு விழா

தினமலர்:ஆகஸ்ட் 28,2010,21:23

பழநி: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் பழநியில் மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடந்தது. சங்க தலைவர் பி.எஸ்.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.நடராஜன் வரவேற் றார். அரசு கொறடா சக்கரபாணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை ஸ்ரீ விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். ராமகிருஷ்ணன் எம். எல்.ஏ., கோவை ஒக்கலிகர் பொதுநல அறக் கட்டளை பொருளாளர் வெள்ளிங் கிரி, பள்ளி தாளாளர்கள் கூடலூர் அச்சுதன், கே. கே.பட்டி கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொரு ளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

ஒக்கலிகர் அறக்கட்டளை முப்பெரும் விழா

ஆகஸ்ட் 27,2010, தினமலர்
துடியலூர் : துடியலூரில் ஒக்கலிகர் அறக்கட்டளை முப்பெரும் விழா நடந்தது. சங்க செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். டாக் டர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் பொதுப்பணி சங்க தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை வழங்கப்பட்டது. விழாவுக் கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை, ஒக்கலிகர் மகாஜன சங்கம் மற்றும் நண்பர்கள் பொதுப்பணி சங்கம் செய்து இருந்தது. விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம், துடியலூர் வட்டார ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.