Friday, July 20, 2012

ஒக்கலிகர் சங்க கூட்டம்

டிசம்பர் 27,2011,22:32 IST








தேனி : தேனி ஒக்கலிகர் நலச்சங்கத்தின் மகாசபை கூட்டம், தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. முன்னாள் செயலாளர் சுப்புராம் வரவேற்றார். செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வாசித்தார். கோவை விஜயலெட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகச்சாமி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, சங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஞ்சடிக மடத்தின் பீடாதிபதி சாந்தவீரசுவாமிகள்,தமிழ்நாடு ஒக்கலிகர் சங்க தலைவர் வெள்ளியங்கிரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூடலூர் நகராட்சி தலைவர் அருண்குமார், க.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் ஜானகி, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி, கே.கே.பட்டி பேரூராட்சி தலைவர் சாந்தி, அன்னஞ்சி ஊராட்சி தலைவர் பிரகாஷ் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நடராஜன், துணை தலைவர்கள் கர்ணன், சிவாஜி மோகன், கூடலூர் ஆனந்தனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், முருகன், துணை செயலாளர்கள் ராஜாராம், ராஜ்குமார், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.
நன்றி தினமலர்