Wednesday, June 2, 2010

ஒக்கலிகர் உனுசுவார் குலம்

நன்றி தினமலர்: மே 29,2010,01:00 IST

உத்தமபாளையம் அருகே ஆனைமலையன் பட்டியில் ஒக்கலிகர் உனுசுவார் குலத்தினருக்கு பாத்தியப்பட்ட மல்லையசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் ஐந்து நாட்களும் கணபதி பூஜை, அர்த்த ஜாம பூஜை, உச்சிகால பூஜை, சிலைகள் ஜலாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

ஜீவ சடங்குகள்,சுவாமி சிலைகளையும், கலசங்களையும் கருவறையில் எழுந்தருளச் செய் தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு மல்லைய சுவாமி மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமாள், மகாவிஷ்ணு, அக்கு மாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நீலகண்டன் நம்பூதிரி, ஈஸ்வரன்போத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.