Thursday, November 11, 2010

போஸ்டருக்கு எதிர்ப்பு

தினமலர் : அக்டோபர் 23,2010
கூடலூர் : சமுதாய சங்கத்தின் பொறுப்பாளர்களை விமர்சித்து போஸ்டர் அடித்து ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கானோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கூடலூர் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கதிர் அடிக்கும் களத்தை பயன்படுத்த இதே சங்கத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சங்கம் சார்பில் ஏலம் விடப்பட்டிருந்தது.

ஏலம் எடுத்த தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னரும் சங்கத்திற்கு அவர் செலுத்தவில்லை. ஏலம் எடுத்த தொகையை செலுத்துமாறு கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சங்க தலைவர் அச்சுதன், செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை கலங்கப்படுத்தும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூடலூரில் உள்ள ஒக்கலிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடலூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம் புகார் கொடுத்தனர்.